இன்னும் சில தினங்களில் போயஸ் கார்டனின் கதவு திறக்கப் போகிறது விஜய் குடும்பத்தினருக்கு. கடந்த வாரத்தில் தனது ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் விவாதித்த விஜய்யும், அவரது அப்பா எஸ்.ஏ.சியும் வருகிற பொதுத் தேர்தலுக்கு முன்பே சில முக்கிய விஷயங்களை செய்து முடிப்பதாக நம்பிக்கை அளித்தார்களாம்.
காவலன் படத்திற்கு இன்னும் ஆடியோ வெளியீட்டு விழாவே நடக்கவில்லை. அதற்குள் ரிலீஸ் பற்றி நிறைய காய் நகர்த்தல்கள் நடந்தேறி வருகின்றன. முந்தைய படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை அவர் திருப்பி கொடுக்காதவரை காவலனுக்கு எதிராக பெரும் போராட்டத்தை கிளப்ப வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். இதை முறியடிக்க வேண்டும் என்பதுதான் முதல் அசைன்மென்ட் விஜய்க்கு.
இந்த நேரத்தில் தன்னை பெரிய அரசியல் இயக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார் அவர். அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் கட்சி துவங்கப்பட்டால் அது தொண்டர்களை இன்னும் எழுச்சியோடு செயல்பட வைக்கும் என்பது அவரது நம்பிக்கை. இதையெல்லாம் மனதில் வைத்துதான் போயஸ் தோட்டத்தில் அப்பாயின்மென்ட் கேட்டார்களாம்.
கொடநாட்டில் இருக்கும் தலைவி சென்னை திரும்பியவுடன் சந்திக்கலாம் என்று பதில் கிடைத்திருக்கிறதாம். அதற்கு முன்பே முதலில் கட்சி ஆரம்பிக்கவும், தேர்தல் நேரத்தில் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவும் பிளான் போட்டு விட்டதாக தகவல் கசிகிறது. சினிமாவில் எதுவும் நடக்கலாம் என்பதெல்லாம் ச்சும்மா. அரசியலில் எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் அடுத்தடுத்த நாட்களில் நடக்கப் போகும் நிஜம்!
காவலன் படத்திற்கு இன்னும் ஆடியோ வெளியீட்டு விழாவே நடக்கவில்லை. அதற்குள் ரிலீஸ் பற்றி நிறைய காய் நகர்த்தல்கள் நடந்தேறி வருகின்றன. முந்தைய படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை அவர் திருப்பி கொடுக்காதவரை காவலனுக்கு எதிராக பெரும் போராட்டத்தை கிளப்ப வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். இதை முறியடிக்க வேண்டும் என்பதுதான் முதல் அசைன்மென்ட் விஜய்க்கு.
இந்த நேரத்தில் தன்னை பெரிய அரசியல் இயக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார் அவர். அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் கட்சி துவங்கப்பட்டால் அது தொண்டர்களை இன்னும் எழுச்சியோடு செயல்பட வைக்கும் என்பது அவரது நம்பிக்கை. இதையெல்லாம் மனதில் வைத்துதான் போயஸ் தோட்டத்தில் அப்பாயின்மென்ட் கேட்டார்களாம்.
கொடநாட்டில் இருக்கும் தலைவி சென்னை திரும்பியவுடன் சந்திக்கலாம் என்று பதில் கிடைத்திருக்கிறதாம். அதற்கு முன்பே முதலில் கட்சி ஆரம்பிக்கவும், தேர்தல் நேரத்தில் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவும் பிளான் போட்டு விட்டதாக தகவல் கசிகிறது. சினிமாவில் எதுவும் நடக்கலாம் என்பதெல்லாம் ச்சும்மா. அரசியலில் எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் அடுத்தடுத்த நாட்களில் நடக்கப் போகும் நிஜம்!

No comments:
Post a Comment